சென்னை: உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவசரகதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டதை எதிர்த்து, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என கூறியும் திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். புதிதாக அறிவிப்பு ஆணை வெளியிட்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் நீதிபதி ஆணையிட்டார்.
உயர்நீதிமன்ற உத்தரவால் எற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இன்றே சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தங்களது தரப்பு வாதத்தை கேட்ட பிறகே மேல்முறையீட்டு மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என கோரி திமுக சார்பிலும் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவால் எற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இன்றே சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தங்களது தரப்பு வாதத்தை கேட்ட பிறகே மேல்முறையீட்டு மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என கோரி திமுக சார்பிலும் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.