ஒரே நாளில் ரூ.1400 கோடிக்கு விற்பனை: பிலிப்கார்ட் சாதனை

புதுடில்லி: ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட், பண்டிகை காலத்தை முன்னிட்டு "பிக் பில்லியன் டே" விற்பனையை அக்டோபர் 3ம் தேதி நடத்தியது. இதில் ஒரே நாளில் ரூ.1400 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஒரே நாளில் ஸ்மார்ட்போன் பிரிவில் அதிகமானவர்கள் ஆர்டர் செய்ததன் காரணமாக இந்த அளவிற்கு விற்பனை அதிகரித்ததாகவும், 2015ம் ஆண்டு 5 நாட்களில் ரூ.2000 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் பிலிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல புதிய வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கியதன் காரணமாக இந்த வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக பிலிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பின்னி பன்சால் தெரிவித்துள்ளார்.

அதிக வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் புக் செய்தாலும் டிராபிக், லோடிங் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பிலிப்கார்ட் நிறுவனம் முன்னேற்பாடுகளை செய்திருந்தது. இதனால் எந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமும் எட்ட முடியாத விற்பனை சாதனையை பிலிப்கார்ட் நிகழ்த்தி உள்ளதாக அதன் தலைவர் அரவிந்த் சிங்கால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இனி வரும் காலங்களில் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகை கால சலுகை அறிவிக்கப்பட்ட பிறகு பிலிப்கார்ட்டில் 40 மில்லியன் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டு பண்டிகை கால விற்பனையில் 80 மில்லியனுக்கும் அதிகமான பொருட்களை விற்பனை செய்து 3 மடங்கு அதிகமாக விற்பனை சாதனையை அமேசான் நிறுவனம் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...