கோவையில் நோய்வாய்ப்பட்டுள்ள வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்ய வேண்டும்


கோவை சிறையில் இன்று ஆயுள் சிறைவாசி அப்துல் ஒசீர் மரணம் தொடர்பாக கோவை சிறையில் நோய்வாய்ப்பட்டுள்ள வாழ்நாள் சிறைவாசிகள் அனைவரையும் தமிழக அரசு விடுதலைச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பத்திரிகை அறிக்கை இன்று வெளியிட்டுள்ளார்.

 

 கோவை மத்திய சிறையில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வந்த இதய நோயாளியான அப்துல் ஒசீருக்கு இன்று காலை கடும் மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார். சிறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பிறகு கோவை அரசினர் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது, ஏற்கெனவே இதய நோயாளியாக இருந்த அப்துல் ஒசீர் தனது இறுதி நாட்களை சிறையிலேயே கழித்து மரணம் அடைந்துள்ளது வேதனைக்குரியதாக உள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து விட்ட சிறைவாசிகளை விடுதலைச் செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் மற்றும் சமுதாய அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றன. கடந்த 14வது தமிழக சட்டமன்றத்தில் இந்த கோரிக்கையை பல முறை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக முன்வைக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.

குறைந்த பட்சம் கடும் நோயினால் அவதிப்படும் ஆயுள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலைச் செய்யவும் தமிழக அரசிடம் பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இந்த கோரிக்கைகளை ஆளும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இதன் விளைவாக சமீப காலமாக ஆயுள் சிறைவாசியாக கோவை சிறையில் மட்டும் மரணித்த முஸ்லிம்களில் அப்துல் ஒசீர்  மூன்றாவது நபர் ஆவார். தஸ்தகீர் என்ற ஆயுள் சிறைவாசி குடல்வால் அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறையில் முறையான தொடர் சிகிச்சைகள் இல்லாததால் மரணித்தார். இதே போல் 17 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த சபூர் ரஹ்மான் (20 வயதில் சிறைக்குச் சென்றவர்) தனது 37 வது வயதில் சிறையிலேயே இதய நோயினால் மரணித்தார். தற்போது 19 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த அப்துல் ஒசீர் இதய நோயினால் பாதிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவிக்கும் நிலையில் மரணித்துள்ளார். இன்னொரு ஆயுள் சிறைவாசி சிறையிலேயே மரணிக்கும் முன் தமிழக அரசு உடனடியாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள அனைத்து சிறைவாசிகளையும் விடுதலைச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

ஆண்டுதோறும் தமிழக சிறைகளில் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்படும் சிறையிலேயே சராசரியாக 60 பேர் மரணிக்கின்றார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. தமிழ்நாடு சிறைவிதிகளின் படி கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை விடுவிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு. இந்த அடிப்படையில் சிறையில் நோய்வாய்ப்பட்டுள்ள அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு சிறைவிதிபடி ஆயுள்தண்டனை பெற்ற 65 வயதுக்கு மேலான முதியவர்களையும் விடுதலை செய்யவேண்டும். இரண்டு பெண் மகளுக்கு தந்தையான அப்துல் ஒசீரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

 சகோதரர் அப்துல் ஒசீர் அவர்களை இழந்து பரிதவிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...