கோவை சிங்காநல்லூரில் வருமானவரித்துறை அலுவலர்கள் போல் நடித்து 150 சவரன் நகை மற்றும் ரூ.40 லட்சம் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் பஷீர் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் 12 பேர் சேர்ந்து 150 சவரன் நகை மற்றும் ரூ.40 லட்சத்தையும் பறித்துச் சென்றனர். இதை தொடர்ந்து தொழிலதிபர் பஷீர் அளித்த புகாரையடுத்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
