கோவையில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட வளர்ப்பு தந்தையை 15 நாட்கள் மத்திய சிறையில் அடைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னையை சேர்ந்த உஷா என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு இவாஞ்சலின் என்கிற ஐந்து வயது மகள் உள்ளது. இந்நிலையில் உஷா, சென்னையில் மகேந்திரன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் குழந்தையோடு கோவை காட்டூர் ராம்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் உஷா வேலை நிமித்தமாக குழந்தையை மகேந்திரனிடம் ஒப்படைத்து விட்டு ஊருக்குசென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்களன்று இரவு மயக்கநிலையில் இவாஞ்சலினை உடல்நிலைசரியில்லை என்று கோவை அரசு மருத்துவமனைக்கு மகேந்திரன் கொண்டு வந்துள்ளனர். உடலில் காயங்களோடு இருந்த இவாஞ்சலின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த சிறிது நேரத்தில் இறந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இறந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து காந்திபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துவிசாரனைமேற்கொள்கையில் வளர்ப்பு தந்தை மகேந்திரன் தலைமறைவாகியிருந்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னைக்கு தப்பிக்க முயன்ற மகேந்திரனை காட்டூர் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து மகேந்திரன் மீது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாட்கள் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஐந்து வயது சிறுமியை வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுகொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.