மேத்யூ புயல் எதிரொலி: புளோரிடா மாகாணத்தில் எமர்ஜென்சி: ஒபாமா அறிவிப்பு

புளோரிடா: 'மேத்யூ' புயல் இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கவிருக்கிறது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா அவசரநிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

"மேத்யூ' புயல்:

வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகிய "மேத்யூ' புயல் லத்தீன் அமெரிக்க நாடான ஹைதி மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளில் ருத்ரதாண்டவம் ஆடியது. இப்புயலுக்கு இதுவரை 140க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது புளோரிடாவை நோக்கி நகர்ந்து வரும் மேத்யூ புயல், அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை நேரத்தில் புளோரிடாவை தாக்க உள்ளது. இனையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி புளோரிடா கவர்னர் ரிக் ஸ்காட் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எமர்ஜென்சி அறிவிப்பு:

இந்நிலையில் மேத்யூ புயல் காரணமாக, புளோரிடா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். புளோரிடாவை தொடர்ந்து மேத்யூ புயல் தென் மற்றும் வட கரோலினா, ஜார்ஜியா, விர்ஜினியா, மேரிலேண்ட் ஆகிய பகுதிகளையும் தாக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...