ஹெய்ட்டி: கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியை மத்தேயு சூறாவளி தாக்கியுள்ளது. இந்த மத்தேயு சூறாவளியில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள தேசிய புயல் மையம், மத்தேயு சூறாவளி படிப்படியான குறைந்து வருகிறது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் முழுமையாக நின்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளது.