ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதி புர்ஹன்வானி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த போராட்டத்தில், பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இது கலவரமாக மாறியதை அடுத்து 92வது நாளாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் நேற்று நடத்திய தாக்குதலை அடுத்து ஸ்ரீநகரில் 7 பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காஷ்மீரில் பதற்றம் தணியாமல் உள்ளதால் பல இடங்களில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில், பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இது கலவரமாக மாறியதை அடுத்து 92வது நாளாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் நேற்று நடத்திய தாக்குதலை அடுத்து ஸ்ரீநகரில் 7 பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காஷ்மீரில் பதற்றம் தணியாமல் உள்ளதால் பல இடங்களில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.