பாகிஸ்தானுக்கு காய்கறி சப்ளை இல்லை: குஜராத் வியாபாரிகள் முடிவு

ஆமதாபாத் : இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்திருப்பதை அடுத்து, பாக்.,க்கு காய்கறி சப்ளை செய்வதை நிறுத்த குஜராத் வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பொருட்களின் சப்ளையை நிறுத்தி உள்ளனர். இதனால் குஜராத் விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு தினமும் சுமார் ரூ.3 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பாக்.,க்கு காய்கறி சப்ளை நிறுத்தப்பட்டது உள்ளது குறித்து ஆமதாபாத் காய்கறி முகவர் சங்க பொதுச் செயலாளர் அகமது பட்டேல் கூறுகையில், குஜராத்தில் இருந்து தினமும் 50 டிரக்களில் 10 டன் காய்கறிகள் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு செல்கிறது. தற்போது இருநாட்டு பதற்றம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக காய்கறிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 1997க்கு பிறகு முதல் முறையாக தற்போது தான் பாக்.,க்கு காய்கறி சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாட்டு உறவுகளும், நிலைமையும் சரியாகும் வரை காய்கறி சப்ளை நிறுத்தப்பட்டு இருக்கும் என்றார். இதனால் வியாபாரிகளுக்கு தினமும் ரூ.3 கோடி இழப்பு ஏற்படும். ஆனால் நாட்டு நலனை விட தனிமனித நலன் பெரிதல்ல. வங்கதேசம், வளைகுடா நாடுகள், கனடா, தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு வழக்கம் போல் காய்கறிகள் அனுப்பப்படும். 

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...