பாகிஸ்தானுக்கு காய்கறி சப்ளை இல்லை: குஜராத் வியாபாரிகள் முடிவு

ஆமதாபாத் : இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்திருப்பதை அடுத்து, பாக்.,க்கு காய்கறி சப்ளை செய்வதை நிறுத்த குஜராத் வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பொருட்களின் சப்ளையை நிறுத்தி உள்ளனர். இதனால் குஜராத் விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு தினமும் சுமார் ரூ.3 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பாக்.,க்கு காய்கறி சப்ளை நிறுத்தப்பட்டது உள்ளது குறித்து ஆமதாபாத் காய்கறி முகவர் சங்க பொதுச் செயலாளர் அகமது பட்டேல் கூறுகையில், குஜராத்தில் இருந்து தினமும் 50 டிரக்களில் 10 டன் காய்கறிகள் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு செல்கிறது. தற்போது இருநாட்டு பதற்றம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக காய்கறிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 1997க்கு பிறகு முதல் முறையாக தற்போது தான் பாக்.,க்கு காய்கறி சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாட்டு உறவுகளும், நிலைமையும் சரியாகும் வரை காய்கறி சப்ளை நிறுத்தப்பட்டு இருக்கும் என்றார். இதனால் வியாபாரிகளுக்கு தினமும் ரூ.3 கோடி இழப்பு ஏற்படும். ஆனால் நாட்டு நலனை விட தனிமனித நலன் பெரிதல்ல. வங்கதேசம், வளைகுடா நாடுகள், கனடா, தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு வழக்கம் போல் காய்கறிகள் அனுப்பப்படும். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...