கர்நாடக அணைகளில் 2வது நாளாக ஆய்வு

பெங்களூரு : கர்நாடக அணைகளை காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு 2-வது நாளாக இன்று ஆய்வு செய்கிறது. ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாண்டியா மாவட்டம் சென்ற நிபுணர் குழுவினர், ஹம்ரஅல்லி மற்றும் தைலுரு ஏரிகளை ஆய்வு செய்தனர். ஆணைத்தொட்டி, ஆவேரிப்பள்ளி கிராமங்கள் மற்றும் மாலவல்லி தாலுக்காவில் காவிரி நீர் பாசனப்பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். இந்நிலையில் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளை அந்த குழு இன்று ஆய்வு செய்கிறது. தொழில்நுட்ப குழுவினர் இன்று இரவு மேட்டூர் வருகின்றனர். மேட்டூர் அணை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளை அவர்கள் நாளை ஆய்வு செய்யலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப குழு, காவிரி நீர்பிடிப்பு பகுதிகள், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, நீர் திறப்பது மற்றும் நீர் இருப்பு ஆகியவற்றை நாளை ஆய்வு செய்ய உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி பாசனப்பகுதிகள் மற்றும் அணைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நீர்வளத்துறை ஆணையர் ஜி. எஸ். ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கை வரும் 17-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட உள்ளது.  

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...