காடுகள் மற்றும் குளங்கள் சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 3C குழு சார்பாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில்  பல்வேறு தீர்மானங்கள் பற்றி பேசப்பட்டது. இக்கூட்டத்தில் குறிச்சி குளம் வெல்பர் அசோசியேஷன் மணிகண்டன், பசுமை தாயகம் ராஜேந்திரன், சுரேஷ் பண்டாரி, பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சமூக காடு வளர்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிலத்தை கண்டுபிடித்து அதற்கு தேவையான ஆவனங்களை தயார் செய்து அங்கு இடத்தின் தன்மைக்கேற்ப நாட்டு மரங்களை நட்டு அதை முறைப்படி 3 வருடங்கள் பராமரித்தல். முக்கியமாக வெள்ளளூர் குப்பைக்கிடங்கின் அருகில் உள்ள இடத்தை பராமரித்தல். சுந்தராபுரம் முதல் திருச்சி சாலையில் கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் சாலையோரத்தில் மரங்கள் நட்டு பராமரித்தல். மதுக்கரை சாலையில் அமைந்த மலைப்பாதையில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி அங்கு மழையை ஈர்க்கும் மரங்களை நட்டு பராமரித்தல். குறிச்சி குளத்திலிருந்து தூர்வாரும் மண்ணை மதுக்கரை ரோட்டில் அமைந்த மலைகளில் சில தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்திய மிகப்பிரமாண்ட குழியில் இட்டு நிரப்பி, அதில் காடுகள் அமைத்தல். மதுக்கரையிலிருந்து குறிச்சி நோக்கி ஓடும் கால்வாயை சுத்தப்படுத்தி நன்நீர் ஓடும் கால்வாயாக மாற்றுதல். நட்டுவைக்கும் மரங்களை ஜியோடேக் முறைப்படி பதிவு செய்து அதற்கு தகுந்த வகையான ஆவணப்படுத்தும் முறைகளைப் பின்பற்றுதல். சுங்கம் முதல் ஓண்டிப்பூதூர் வரையிலான சாலையின் நடுவில் செடிகளை நட்டு காற்று மாசைக்குறைத்தல். ரத்தினம் கல்லூரியிலிருந்து வெளியேரும் கழிவு நீரை மரங்களுக்கு ஊற்றும் வகையில் தூய்மைப்படுத்துவது. ரயில்வே கேட்டின் அருகில் சிறு சிறு காடுகளை உருவாக்குவது. மதுக்கரை அருகே யானைகள் மரணமடைவதை தடுக்க காடுகளுக்குள் தண்ணீர் தொட்டிகள் மற்றும் வாழைத்தார்களை உணவாக அளிப்பது. மக்கள் ஆர்வமுடன் இருப்பார்களேயானால் அவர்கள் பகுதியிலும் மரங்கள் நட்டு அந்த இடத்தின் அருகாமையில் உள்ள மக்களின் உதவியுடன் பாராமரித்தல். வீதி நாடகங்களுக்கான போட்டிகளை பள்ளிக் கல்லூரிகளில் நடத்தி குழந்தைகளிடையே நல்ல சிந்தனைகளை உருவாக்குவது. மழைநீர் குட்டைகளை ஆங்காங்கே நிறுவி தண்ணீர் சேமிப்பது. ஆறு அடி உள்ள மரங்களை மட்டுமே நடுவது, ஆகவே, நமக்காகவே ஒரு நர்ஸரி உருவாக்குவது. ஆர்வம் உள்ள தனியார் நிறுவனங்களிடமும் நிதிபெற்று, அரசாங்கத்தின் திட்டங்களையும், இதற்கான நிதிகளையும் ஒருமுகப்படுத்தி திட்டங்களை தன் ஆர்வலர்கள் உதவியுடன் நிறைவேற்றுவது. போன்ற பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...