பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி, முதியவர் கைது

கோவை பீளமேடு பகுதியை அடுத்த காமராஜர் நகரை சேர்ந்தவர் மயில்சாமி. நேற்று மாலை இவர் தனது குடும்பத்துடன் வெளியே சென்றார். இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு திரும்பும் போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. சுதாரித்து கொண்ட மயில்சாமி, அக்கம் பக்கத்தினரை அழைத்துக்கொண்டு, வீட்டிற்குள் மெதுவாக சென்றார். அப்போது, வீட்டிற்குள் இருந்த நபர் பீரோவை உடைக்க முயன்று கொண்டிருந்தார். இதை பார்த்த மயில்சாமி அவரை கையும், களவுமாக பிடித்து பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தர். விசாரணையில் அவர் கூடலூரை சேர்ந்த குமார் (64) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...