கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி சுசீலா ராணி (51) இவர் நேற்று மாலை வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்.அப்போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த இருவர் சுசீலா ராணி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து சென்றனர். இது குறித்து அவர் சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் இரு வரை தேடி வருகின்றனர்.