கோவை, அக். 11-
கோவை மாவட்டம், தடாகம் பகுதியானது மலையடிவாரதில் அமைந்துள்ளதால் அடிக்கடி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் நுழைவது வழக்கம். இந்நிலையில், புதனன்று (இன்று) அதிகாலை 2 காட்டு யானைகள் தடாகம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையை சேதப்படுத்தியது.

மேலும், பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றை உட்கொண்டது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அதனை விரட்டவே யானைகள் இரண்டும் அருகில் இருந்த ஒரு பலசரக்கு கடையினை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி நுழைத்து இவ்வாறான தாக்குதலில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவை மாவட்டம், தடாகம் பகுதியானது மலையடிவாரதில் அமைந்துள்ளதால் அடிக்கடி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் நுழைவது வழக்கம். இந்நிலையில், புதனன்று (இன்று) அதிகாலை 2 காட்டு யானைகள் தடாகம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையை சேதப்படுத்தியது.

மேலும், பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றை உட்கொண்டது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அதனை விரட்டவே யானைகள் இரண்டும் அருகில் இருந்த ஒரு பலசரக்கு கடையினை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி நுழைத்து இவ்வாறான தாக்குதலில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.