மதுரையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்குமிடம், உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு நிதியுதவியுடன் இளைஞர் நலப் படிப்பியல் மூலமாக இந்திய குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. 2017-ம் ஆண்டு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான நுழைவுத் தேர்வு screeming test 20.11.2016 ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. 

வயது மற்றும் கல்வி தகுதி: 
இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், 1.8.2017&ந் தேதியில் 21 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும். 

பயிற்சி விபரங்கள்: 
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் நூறு நபர்களுக்கு இனச்சுழற்சி முறையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சி வகுப்புகள் 5.12.2016 முதல் 17.12.2016 வரை நடைபெறுகின்றன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான பயிற்சி, தங்குமிடம், உணவு, பயிற்சி படிப்பு சாதனங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. 

விண்ணப்பிக்கும் முறை: 
பயிற்சிக்கான விண்ணப்ப படிவங்களை http://mkuniversity.org/direct/index.html என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரரின் படிப்பு, வயது, பிறந்த தேதி, இனம், நிரந்தர முகவரி ஆகியவைகளுக்கான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். 

இத்துடன் 2 அலுவலகக் கவர்களில் ரூ. 5 அஞ்சல்முத்திரை ஒட்டப்பட்டு சுய முகவரியுடன் எழுதி அனுப்ப வேண்டும். அலுவலக கவர்களில் “Application for Admission to Coaching for Civil Services Aptitude Test-2017” பயிற்சிவகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டு பயிலக இயக்குநர், அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாடமி, இளைஞர் நல படிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை&625021 என்ற முகவரிக்கு அணுப்ப வேண்டும். 31.10.2016 பயிற்சி பெற கடைசி நாளாகும்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...