மதுரையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்குமிடம், உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு நிதியுதவியுடன் இளைஞர் நலப் படிப்பியல் மூலமாக இந்திய குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. 2017-ம் ஆண்டு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான நுழைவுத் தேர்வு screeming test 20.11.2016 ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. 

வயது மற்றும் கல்வி தகுதி: 
இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், 1.8.2017&ந் தேதியில் 21 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும். 

பயிற்சி விபரங்கள்: 
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் நூறு நபர்களுக்கு இனச்சுழற்சி முறையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சி வகுப்புகள் 5.12.2016 முதல் 17.12.2016 வரை நடைபெறுகின்றன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான பயிற்சி, தங்குமிடம், உணவு, பயிற்சி படிப்பு சாதனங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. 

விண்ணப்பிக்கும் முறை: 
பயிற்சிக்கான விண்ணப்ப படிவங்களை http://mkuniversity.org/direct/index.html என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரரின் படிப்பு, வயது, பிறந்த தேதி, இனம், நிரந்தர முகவரி ஆகியவைகளுக்கான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். 

இத்துடன் 2 அலுவலகக் கவர்களில் ரூ. 5 அஞ்சல்முத்திரை ஒட்டப்பட்டு சுய முகவரியுடன் எழுதி அனுப்ப வேண்டும். அலுவலக கவர்களில் “Application for Admission to Coaching for Civil Services Aptitude Test-2017” பயிற்சிவகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டு பயிலக இயக்குநர், அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாடமி, இளைஞர் நல படிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை&625021 என்ற முகவரிக்கு அணுப்ப வேண்டும். 31.10.2016 பயிற்சி பெற கடைசி நாளாகும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...