எண்ணெய் விலையை உயர்த்தும் முயற்சிக்கு ஆதரவு தரத் தயார்: புதின்

எண்ணெய் விலைகளை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தியில் உச்சவரம்பை விதிக்க தான் ஆதரவு தரத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் நடைபெற்ற எரிபொருள் மாநாட்டில் பேசிய அவர், நவம்பரில் நடைபெறவுள்ள சந்திப்பில், எண்ணெய் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பான ஒபக், எண்ணெய் உற்பத்தியில் குறிப்பிட்ட வரம்பு விதிக்கும் முயற்சிகளை தான் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

கூட்டமைப்பின் உறுப்பினர்களை தவிர்த்து, ரஷியா ஒரு முக்கிய எரிபொருள் உற்பத்தியாளராக உள்ளது.

தென் கிழக்கு ஐரோப்பாவில் முடிவடையும் வகையில், யுக்ரைன் வழியாக ரஷியாவிலிருந்து துருக்கிக்கு எரிவாயு குழாய் அமைப்பது குறித்து விவாதிக்க புதின் துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...