கோவை, அக். 11-
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பல்வேறு விரதத்துடன் கொண்டாடப்படும் 9 நாட்கள் நவராத்திரி என்றழைக்கப்படுகிறது. இதில் முதல் 3 நாட்கள் துர்கா தேவி நாளாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமி நாளாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த 9 நாட்களின் இறுதியில் கொண்டாடப்படும் 10வது நாளே விஜயதசமி ஆகும். இந்த நாளில் குழந்தைகளை பள்ளிக்கு சேர்த்தாலோ அல்லது எழுத, படிக்க வைத்தாலோ அக்குழந்தை சிறப்பாக படிக்கும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விஜயதசமி தினம் புதனன்று (இன்று) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதில், கொட்டப்பட்ட நெட்களில் குழந்தைகள் ''அ'' என எழுதியும், குழந்தையின் நாக்கில் நெல் மணியால் ''அ'' என எழுதியும் பெற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பல்வேறு விரதத்துடன் கொண்டாடப்படும் 9 நாட்கள் நவராத்திரி என்றழைக்கப்படுகிறது. இதில் முதல் 3 நாட்கள் துர்கா தேவி நாளாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமி நாளாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த 9 நாட்களின் இறுதியில் கொண்டாடப்படும் 10வது நாளே விஜயதசமி ஆகும். இந்த நாளில் குழந்தைகளை பள்ளிக்கு சேர்த்தாலோ அல்லது எழுத, படிக்க வைத்தாலோ அக்குழந்தை சிறப்பாக படிக்கும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விஜயதசமி தினம் புதனன்று (இன்று) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதில், கொட்டப்பட்ட நெட்களில் குழந்தைகள் ''அ'' என எழுதியும், குழந்தையின் நாக்கில் நெல் மணியால் ''அ'' என எழுதியும் பெற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


