‘தமிழக முதல்வர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர பாஜக கட்சி வலியுறுத்தாது’ என்று பாஜக கட்சியின் தேசிய செயலாளரும், தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளருமான முரளிதர ராவ் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: தமிழ்நாட்டில், காவேரி மேலாண்மை அமைக்க, ‘நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்துதான் மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். இரு மாநிலம் தொடர்பான பிரச்னையில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது. ‘தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை’ பாஜக பிரமுகர்கள் கொலை விஷயத்தில் தொடர்புடையவர்கள் மீது மென்மையான அணுகுமுறையை தமிழக அரசு பின்பற்றுகிறது. முதலமைச்சர் உடல்நிலையை கருதி, துணை முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என பாஜக கூறாது.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு பாஜக வலியுறுத்தாது. என்று அவர் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: தமிழ்நாட்டில், காவேரி மேலாண்மை அமைக்க, ‘நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்துதான் மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். இரு மாநிலம் தொடர்பான பிரச்னையில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது. ‘தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை’ பாஜக பிரமுகர்கள் கொலை விஷயத்தில் தொடர்புடையவர்கள் மீது மென்மையான அணுகுமுறையை தமிழக அரசு பின்பற்றுகிறது. முதலமைச்சர் உடல்நிலையை கருதி, துணை முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என பாஜக கூறாது.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு பாஜக வலியுறுத்தாது. என்று அவர் கூறினார்.