சர்வதேச அளவில் அக்டொபர் 11ம் தேதி பெண் குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டு கடந்த 2012ம் வருடம் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பெண் குழந்தை என்றாலே வீட்டில் ஒரு மகாலக்ஷ்மி பிறந்து விட்டதாகவே பெரும்பாலான பெற்றோர்கள் தற்போது கொண்டாடி மகிழ்கின்றனர். இவுலகின் வலிமை மிக்க தூண்களாகவே அவர்கள் போதிக்கப்படுகின்றனர்.
அனைத்து துறைகளிலும் காலூன்றி கல்வி, அறிவியல் துறை, ராணுவம் என எவ்வித வரைமுறையும் இன்றி செயல்படும் பெண்களின் சாதனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
முன்னொரு காலத்தில் பெண்பிள்ளை என்றாலே பெற்றோர்களுக்கு சுமையாகவும், ஆண்களுக்கு சேவை செய்ய மட்டுமே என அவர்கள் கருதப்பட்டு வந்தனர். வாழ்க்கை சிறியதாக, சுதந்திரத்தை சமையல் அறையில் மட்டுமே பெண் அனுபவித்து வந்தால். ஒருகட்டத்தில் பெண் சிசுவை கொலை செய்யும் சம்பவங்களும் அதிகம் அரங்கேறின. இதன் விளைவு தற்போது ஆண்களின் எண்ணிக்கை விகிதத்தை விட பெண்களின் விகிதம் குறைவாகவே உள்ளது.
இவ்வாறான பல்வேறு ஒடுக்குமுறைகளை அனுபவித்து வரும் பெண்களை காக்க அரசும், பல அமைப்புகளும் இணைந்து பெண்களுக்கென பாதுகாப்பு சட்டங்களை உருவாக்கி அதனை செயல்படுத்த தொடங்கியது. இதனால், அவர்களின் மீதான ஒடுக்குமுறைகள் ஓரளவிற்கு குறைக்கப்பட்டது.
இருப்பினும் முழுமையான சுதந்திரதை அவர்களால் அனுபவிக்க முடிவதில்லை. இன்றளவும் வன்முறைகளும், பாலியல் வன்புணர்ச்சிகளும் பெண்களின் மீது தொடுக்கப்பட்டே வருகிறது. பெண்கள் வெறும் போகப்பொருள் அல்ல. அவர்கள் இந்த உலகின் வலிமை மிக்க தூண்கள் என அனைவரும் உணர வேண்டும்.
இந்நாளில் பெண்களை போற்றி, பெண் குழந்தைகளை பாதுகாப்போம். அவர்களுக்கான சுதந்திரமான ஒரு சமூகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்போம்.
பெண் குழந்தை என்றாலே வீட்டில் ஒரு மகாலக்ஷ்மி பிறந்து விட்டதாகவே பெரும்பாலான பெற்றோர்கள் தற்போது கொண்டாடி மகிழ்கின்றனர். இவுலகின் வலிமை மிக்க தூண்களாகவே அவர்கள் போதிக்கப்படுகின்றனர்.
அனைத்து துறைகளிலும் காலூன்றி கல்வி, அறிவியல் துறை, ராணுவம் என எவ்வித வரைமுறையும் இன்றி செயல்படும் பெண்களின் சாதனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
முன்னொரு காலத்தில் பெண்பிள்ளை என்றாலே பெற்றோர்களுக்கு சுமையாகவும், ஆண்களுக்கு சேவை செய்ய மட்டுமே என அவர்கள் கருதப்பட்டு வந்தனர். வாழ்க்கை சிறியதாக, சுதந்திரத்தை சமையல் அறையில் மட்டுமே பெண் அனுபவித்து வந்தால். ஒருகட்டத்தில் பெண் சிசுவை கொலை செய்யும் சம்பவங்களும் அதிகம் அரங்கேறின. இதன் விளைவு தற்போது ஆண்களின் எண்ணிக்கை விகிதத்தை விட பெண்களின் விகிதம் குறைவாகவே உள்ளது.
இவ்வாறான பல்வேறு ஒடுக்குமுறைகளை அனுபவித்து வரும் பெண்களை காக்க அரசும், பல அமைப்புகளும் இணைந்து பெண்களுக்கென பாதுகாப்பு சட்டங்களை உருவாக்கி அதனை செயல்படுத்த தொடங்கியது. இதனால், அவர்களின் மீதான ஒடுக்குமுறைகள் ஓரளவிற்கு குறைக்கப்பட்டது.
இருப்பினும் முழுமையான சுதந்திரதை அவர்களால் அனுபவிக்க முடிவதில்லை. இன்றளவும் வன்முறைகளும், பாலியல் வன்புணர்ச்சிகளும் பெண்களின் மீது தொடுக்கப்பட்டே வருகிறது. பெண்கள் வெறும் போகப்பொருள் அல்ல. அவர்கள் இந்த உலகின் வலிமை மிக்க தூண்கள் என அனைவரும் உணர வேண்டும்.
இந்நாளில் பெண்களை போற்றி, பெண் குழந்தைகளை பாதுகாப்போம். அவர்களுக்கான சுதந்திரமான ஒரு சமூகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்போம்.