கண்ணாடி கூரைகளால் ஆன புதிய ரயிலை இந்த மாதம் அறிமுகப்படுத்துகிறது இந்திய ரயில்வே

புதுடெல்லி: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக இந்திய ரயில்வே முதன் முதலில் இந்த மாதம் முதல் கண்ணாடி கூரைகளால் ஆன ரயிலை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த வகையிலான மேலும் மூன்று ரயில்களை டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சியின் நிர்வாக இயக்குநர் ஏ.கே. மனோச்சா கூறியதாவது: - புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள கண்ணாடி கூரைகளால் ஆன இந்த ரயில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்நாட்டு பயணிகளையும் கவரும். இந்த திட்டம் 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கண்ணாடி மேற்கூரை ரயில்களை வடிவமைக்கும் பணியில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஈடுபட்டது.
ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு பணிகள் தமிழ்நாடு சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்பெட்டிகள் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையில் நடந்து வருகிறது.

ஏரியல் காட்சி, சுழற் நாற்காலிகள் கொண்ட ஒவ்வொரு கோச்சின் மத்திப்பு 4 கோடி ரூபாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுவிச்சர்லாந்து போன்ற நாடுகளில் இயக்கபடும் ரயில்கள் போல் இதுவும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும்.

இதனால் ரயில் பணிகளின் போக்குவரத்து அதிகரிக்கும் என்று நம்புவதாகவும், தற்போதுள்ள ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில் பணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டங்கள் நிறைய வைத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...