கோவை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் நிர்மல் குமார் (17). ஈரோடு மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டி கிராமத்தில் தந்தை குழந்தைவேல் மற்றும் தாயார் சகுந்தலா ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நிர்மல் குமார் கடந்த 10ம் தேதியன்று வீட்டிலிருந்து கல்லூரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் அவ்வழியாக சென்றுகொன்றிருந்த ஒரு பேருந்தின் மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நிர்மல் குமார் சிகிச்சைக்காக ஈரோடு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவையில் செயல்பட்டு வரும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2ம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நிர்மலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன்வந்ததை அடுத்து கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் மற்றும் கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த உடல் உறுப்புகள் 6 நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் என கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நிர்மல் குமார் கடந்த 10ம் தேதியன்று வீட்டிலிருந்து கல்லூரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் அவ்வழியாக சென்றுகொன்றிருந்த ஒரு பேருந்தின் மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நிர்மல் குமார் சிகிச்சைக்காக ஈரோடு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவையில் செயல்பட்டு வரும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2ம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நிர்மலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன்வந்ததை அடுத்து கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் மற்றும் கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த உடல் உறுப்புகள் 6 நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் என கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் தெரிவித்துள்ளார்.