அரியானாவில் முதன்முறையாக திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க முடிவு

அம்பாலா: அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜ அரசு ஆட்சி செய்து வருகிறது. இங்கு பல்வேறு திட்டங்களை  அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக அம்பாலாவில் முதன்முறையாக கைதிகளுக்கான திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கப்படுகிறது.  இதன் மூலம் கைதிகள் திறந்த வெளியில் சுதந்திரமாக உலாவ முடியும். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி யஷ்பால் சிங்கால் கூறுகையில், அரியானா  மாநிலத்திலேயே முதன்முறையாக இப்போதுதான் அம்பாலாவில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அரியானாவில் அமைய இருக்கும் திறந்த வெளி சிறைச்சாலையானது மற்ற மாநிலங்களில் அமைந்துள்ள திறந்த வெளி சிறைச்சாலையை விட  மேம்பட்டதாக இருக்கும். இங்கு குறைந்த அளவே சிறை பாதுகாவலர்கள் ஈடுபடுவர். நன்னடத்தை கொண்ட கைதிகள் மட்டுமே இங்கு அடைக்கப்பட  உள்ளனர். எனவே இங்குள்ள கைதிகள் மற்ற கைதிகளை விட சற்று சுதந்திரமாக வெற்று வெளியில் உலாவும் வைகையில் அமைக்கப்பட உள்ளது என்றார்.

மேலும் அரியானா சிறைச்சாலைகில் கைதிகள் மத்தியில் பெருகி வரும் செல்போன் பயன்பாட்டை தடுக்கும் வகையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு  வருகிறது. சோனிபட் மற்றும் ரோட்டக் ஆகிய சிறைச்சாலைகளில் ஜாமர் கருவிகள் பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான  பணியை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மேலும் அவர் கூறினார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...