அரியானாவில் முதன்முறையாக திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க முடிவு

அம்பாலா: அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜ அரசு ஆட்சி செய்து வருகிறது. இங்கு பல்வேறு திட்டங்களை  அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக அம்பாலாவில் முதன்முறையாக கைதிகளுக்கான திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கப்படுகிறது.  இதன் மூலம் கைதிகள் திறந்த வெளியில் சுதந்திரமாக உலாவ முடியும். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி யஷ்பால் சிங்கால் கூறுகையில், அரியானா  மாநிலத்திலேயே முதன்முறையாக இப்போதுதான் அம்பாலாவில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அரியானாவில் அமைய இருக்கும் திறந்த வெளி சிறைச்சாலையானது மற்ற மாநிலங்களில் அமைந்துள்ள திறந்த வெளி சிறைச்சாலையை விட  மேம்பட்டதாக இருக்கும். இங்கு குறைந்த அளவே சிறை பாதுகாவலர்கள் ஈடுபடுவர். நன்னடத்தை கொண்ட கைதிகள் மட்டுமே இங்கு அடைக்கப்பட  உள்ளனர். எனவே இங்குள்ள கைதிகள் மற்ற கைதிகளை விட சற்று சுதந்திரமாக வெற்று வெளியில் உலாவும் வைகையில் அமைக்கப்பட உள்ளது என்றார்.

மேலும் அரியானா சிறைச்சாலைகில் கைதிகள் மத்தியில் பெருகி வரும் செல்போன் பயன்பாட்டை தடுக்கும் வகையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு  வருகிறது. சோனிபட் மற்றும் ரோட்டக் ஆகிய சிறைச்சாலைகளில் ஜாமர் கருவிகள் பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான  பணியை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மேலும் அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...