ஆளுநரின் நடவடிக்கைக்கு ஸ்டாலின் வரவேற்பு: மாநில நலனுக்கான மாற்று ஏற்பாடு என கருத்து


சென்னை: முதலமைச்சரின் இலாக்காக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை திமுக உட்பட பல்வேறு கட்சிகள் வரவேற்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில நிர்வாக நலன் கருதி தமிழக ஆளுநர் எடுத்துள்ள இந்நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நலம்பெற்று திரும்பும்வரை தமிழகத்தின் நலன் கருதி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளதால், காவிரி உள்ளிட்ட பிரச்சனைகளில் அமைச்சரவையைக் கூட்டி முக்கிய முடிவெடுக்க முடியும் என்று அவர் கூறினார்.

ஆளுநரின் நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் வரவேற்றுள்ளார். பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் ஆளுநரின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக நலனை கருத்தில் கொண்டு நிதி அமைச்சர் உரிய முடிவு எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...