முஹர்ரம் பண்டிகை

இஸ்லாமியர்களுக்கு என்று அல்லாஹ் அனுமதித்த மற்றும் அல்லாஹ்வின் ரசூல் முகம்மது நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த இரண்டு பண்டிகைகள் மட்டுமே இஸ்லாமிய பெருமக்களுக்கு கொண்டாடப்பட வேண்டிய பெருநாட்கள் ஆகும். 1.அரபி மாதமான 9வது மாதம் ரமலான்,  இம்மாதம் முழுவதும் 30  நாட்கள் நோன்பு இருந்து அந்த நோன்புகளை முடித்த பிறகு 10வது அரபி மதமான ஷவ்வால் மாதத்தில் முதல் தேதி (முதல் பிறை) அன்று கொண்டாடப்படுவது ரமலான் பண்டிகை. 2.துல்ஹஜ் என்ற 12வது அரபி மாதத்தில் பிறைகள் 10, 11, 12 ஆகிய மூன்று தினங்கள் மட்டும் கொண்டாடப்படும் தியாகாதிருநாள் என்னும் ஹஜ் பண்டிகைகள் ஆகும்.



இந்த இரண்டு பண்டிகை  நாட்களில் மட்டும் நோன்புகள் நோற்க கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தும் இருக்கிறார்கள். இந்த நாட்களில் இறை வணக்கம் செலுத்திவிட்டு, வயிறாற சாப்பிட்டும், உணவில்லாதவர்களுக்கு உணவுகள்கொடுத்தும், பண உதவிகள் செய்தும், தான தர்மங்கள் செய்தும், புத்தாடை உடுத்தியும் மிகவும் சிறப்பாகக்கொண்டாடச்  சொல்லி தந்திருக்கிறார்கள் இறை தூதர் முகம்மது நபி(ஸல்)அவர்கள்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:

அரபி மாதத்தின் முதல் மாதமான முஹரம் என்ற மாதம் இது. இந்த மாதத்தின் சிறப்பு என்னவென்றால், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த இறை தூதரான மூஸா (அலை) அவர்களால் ப்ரவுன் என்ற கொடுங்கோல் ஆட்சியாளனை கடலில் அல்லாஹ் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களைவெற்றி பெற செய்த நாள்தான் இந்த முஹர்ரம் மாதத்தின் பிறை 10-ஆம் நாள் ஆகும். முஹம்மது (ஸல்) அவர்கள்காலத்தில் வாழ்ந்த யூதர்கள் இந்த மாதத்தின் 10-ஆம் நாள் அன்று நோன்பு நோற்று வந்தார்கள். அவர்களை கண்ட நபிகள் பெருமானார் எதற்காக நீங்கள் நோன்பு நோற்கிறீர்கள் என்று வினாவினார்கள். அவர்கள் மூஸா (அலை) அவர்கள் ப்ரவுனை வெற்றி பெற்ற இந்த நாளை நாங்கள் நன்றி சொல்லும் விதமாக நோன்புநோற்று வருகிறோம் என்றும் சொன்னார்கள். அப்பொழுதுதான் நபி (ஸல்) சொன்னார்கள், மூஸா (அலை)அவர்கள் வெற்றி பெற்ற இந்த நாளுக்கு நன்றி சொல்வதற்க்கு உங்களைவிட நாங்களே சிறந்தவர்கள் என்றுகூறிவிட்டு, அன்றைய தினத்திலிருந்து இஸ்லாமியர்களை முஹரம் 10-ஆம் நாள் நோன்பு நோற்க சொல்லிதந்தார் நமது நபி அவர்கள்.

ஆனால் தான் இறப்பதற்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் நான் உயிரோடு இருந்தால்,யூதர்களை போலவே நாமும் 10-ஆம் நாள் மட்டும் நோன்பு நோற்க கூடாது, நாம் அதற்கு வித்தியாசமாக,இன்னும் கூடுதலாக 9, 10 ஆகிய இரண்டு நாட்களும் சேர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் அதை அறிவித்த அடுத்த வருடம் நபி (ஸல்) இந்த பூமியில் உயிரோடு இல்லை. இறைவனடி சேர்ந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த இந்த நோன்பைதான் ஆஷூரா நோன்பு என்று அழைக்கப்படும். முஹர்ரம் மாதத்தின் பிறை 9,10 அல்லது 10,11 ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு நோற்றால் அல்லாஹ் ஒரு வருடகால பாவங்களை மன்னிப்பான் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

எனவே, உலக முஸ்லீம்கள் அனைவரும் இந்த இரண்டு தினங்களும் நோன்பு நோற்று, இந்த சுன்னத்தான வழிமுறையைபினை பின்பற்றி வருகின்றனர். இந்த நோன்பு நோற்போர்களின் ஒரு வருட கால குறைகளையும், பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என்று நம்பிக்கை கொண்டு அனைவருக்காகவும் இந்த முஹரம் மாதத்தில் நோன்புநோற்று பிராத்தனை செய்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...