கோவை, சூலூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் மணிகண்டன் (19) சூலூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில் ஐடிஐ படித்து வந்தார்.
இந்நிலையில், செவ்வாயன்று தனது பெற்றோர்களுடன் எப்பொழுதும் போல் பேசிக்கொண்டிருந்த மணிகண்டன், புதனன்று வீட்டில் இருந்த சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த வீட்டினர் அவரை மீட்டு கோவை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்க கொண்டுசென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனின் கைபேசியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாயன்று தனது பெற்றோர்களுடன் எப்பொழுதும் போல் பேசிக்கொண்டிருந்த மணிகண்டன், புதனன்று வீட்டில் இருந்த சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த வீட்டினர் அவரை மீட்டு கோவை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்க கொண்டுசென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனின் கைபேசியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.