கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி சார்தகலா நவராத்திரி மோச்சவம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மேயர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, பிரம்மாண்ட யாகம் வளர்க்கப்பட்டு, பாரம்பரிய நடனம் ஆடப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநில நடனக்கலைஞர்கள் பங்கேற்று நவராத்திரிக்கான நடனத்தை ஆடியபடியே வீதியுலா வந்தனர்.

இந்த நடனக் குழுவினர், பெரியசுவாமி சாலை, வெங்கட்டராமன் சாலை, தடாகம் உள்ளிட்ட சாலைகளின் வழியாக வந்தனர். பல்வேறு வகையாக அலங்கரிக்கப்பட்டு நடனமாடியதை ஏராளமான மக்க;மக்கள் கண்டு ரசித்தனர்.


இதனைத்தொடர்ந்து, பிரம்மாண்ட யாகம் வளர்க்கப்பட்டு, பாரம்பரிய நடனம் ஆடப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநில நடனக்கலைஞர்கள் பங்கேற்று நவராத்திரிக்கான நடனத்தை ஆடியபடியே வீதியுலா வந்தனர்.

இந்த நடனக் குழுவினர், பெரியசுவாமி சாலை, வெங்கட்டராமன் சாலை, தடாகம் உள்ளிட்ட சாலைகளின் வழியாக வந்தனர். பல்வேறு வகையாக அலங்கரிக்கப்பட்டு நடனமாடியதை ஏராளமான மக்க;மக்கள் கண்டு ரசித்தனர்.
