தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக நவராத்திரி தினங்களும், விஜயதசமியும் கொண்டாடப்பட்டு வந்தது. இதற்கென மக்கள் அதிகளவில் பழவகைகளை வாங்கி படையலிட்டு வழிபட்டு வந்தனர். இதனால், சாலையெங்கிலும் பழ வியாபாரிகளும், பூ வியாபாரிகளும் அதிகளவில் காணப்பட்டனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமையுடன் பண்டிகை தினங்கள் முடிவடைந்ததையொட்டி சாலையோர வியாபாரிகள் விற்பனை ஆகாமல் மீதமான காய்கறிகள், பழவகைகளை சாலையிலேயே கொட்டிச் சென்றனர். மேலும், பல வணிக நிறுவனங்கள் தங்களது கடை மற்றும் நிறுவனங்களின் முன் உடைத்த பூசணிக்காய்கள் அதிகளவில் சாலையில் தேங்கின.
இதனை சுத்தப்படுத்தும் வகையில், மாநகராட்சியின் சார்பில் 20 டன் கொள்ளளவு கொண்ட 4 கண்டைனர் லாரிகள், 10க்கும் மேற்பட்ட திறந்த நிலை லாரிகள், 3 டன் கொள்ளளவு கொண்ட 7 லாரிகள், 5 டன் கொள்ளளவு கொண்ட 15 கண்டைனர், 4 ஜேசிபி என சுமார் 35க்கும் மேற்பட்ட வாகனங்களும், 65க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பூ மார்க்கட், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட பனியில் 225 டன் காய்கறி, பழவகை கழிவுகளை சாலையில் இருந்து அகற்றினர்.
இதுகுறித்து சுகாதார அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த சுத்தப்படுத்தும் பணியில் மத்திய பகுதியில் 32 பணியாளர்களும், மேற்கு மண்டலத்தில் 30 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து, இரவு பகலாக தங்களது பணியினை மேற்கொண்டு வருகின்றனர் என்றார். மேலும், இந்த இயற்கை கழிவு பொருட்கள் மண்புழு உரமாக்கல் ஆலைக்கு அனுப்பப்பட உள்ளது என்றார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமையுடன் பண்டிகை தினங்கள் முடிவடைந்ததையொட்டி சாலையோர வியாபாரிகள் விற்பனை ஆகாமல் மீதமான காய்கறிகள், பழவகைகளை சாலையிலேயே கொட்டிச் சென்றனர். மேலும், பல வணிக நிறுவனங்கள் தங்களது கடை மற்றும் நிறுவனங்களின் முன் உடைத்த பூசணிக்காய்கள் அதிகளவில் சாலையில் தேங்கின.
இதனை சுத்தப்படுத்தும் வகையில், மாநகராட்சியின் சார்பில் 20 டன் கொள்ளளவு கொண்ட 4 கண்டைனர் லாரிகள், 10க்கும் மேற்பட்ட திறந்த நிலை லாரிகள், 3 டன் கொள்ளளவு கொண்ட 7 லாரிகள், 5 டன் கொள்ளளவு கொண்ட 15 கண்டைனர், 4 ஜேசிபி என சுமார் 35க்கும் மேற்பட்ட வாகனங்களும், 65க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பூ மார்க்கட், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட பனியில் 225 டன் காய்கறி, பழவகை கழிவுகளை சாலையில் இருந்து அகற்றினர்.
இதுகுறித்து சுகாதார அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த சுத்தப்படுத்தும் பணியில் மத்திய பகுதியில் 32 பணியாளர்களும், மேற்கு மண்டலத்தில் 30 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து, இரவு பகலாக தங்களது பணியினை மேற்கொண்டு வருகின்றனர் என்றார். மேலும், இந்த இயற்கை கழிவு பொருட்கள் மண்புழு உரமாக்கல் ஆலைக்கு அனுப்பப்பட உள்ளது என்றார்.