கரூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட 400 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம், கடம்பன் குறிச்சியில் மணல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியை மூடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு, இயக்குநர் கவுதமன் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்த 400 பேர் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, விதிகளை மீறி குவாரிகளில் மணல் அள்ளப்படுவதால் விவசாயம், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக புகார் கூறினார்.
கரூர் மாவட்டம், கடம்பன் குறிச்சியில் மணல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியை மூடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு, இயக்குநர் கவுதமன் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்த 400 பேர் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, விதிகளை மீறி குவாரிகளில் மணல் அள்ளப்படுவதால் விவசாயம், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக புகார் கூறினார்.