பெரிய அளவில் தெற்கு ஆசிய கூட்டமைப்பு; இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் திட்டம்

சார்க் கூட்டமைப்பில் இந்தியாவால் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான், பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, ஈரானை சேர்த்து, மிகப்பெரிய தெற்காசிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

யூரி தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை புறக்கணிக்க போவதாக இந்தியா அறிவித்தது. இந்தியாவிற்கு ஆதரவாக, வங்கதேசம், பூடான், ஆப்கன் நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன. இதனையடுத்து மாநாடு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சார்க் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவிற்கு போட்டியாக தெற்காசிய அளவில், சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை இணைத்து பெரிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் அமெரிக்கா வந்த பாகிஸ்தான் குழுவினர் கூறுகையில், மிகப்பெரிய தெற்காசிய அமைப்பு உருவாகி வருகிறது. இந்த அமைப்பில் சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய அண்டை நாடுகள் இருக்கும். சீனா - பாகிஸ்தான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு திட்டம், தெற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவை இணைக்கும். சீனாவுக்கு மட்டுமல்லாமல், மத்திய ஆசிய நாடுகளுக்கும் குவாடர் துறைமுகம் எளிதாக அணுகுவதாக இருக்கும். இந்த அமைப்பில் இந்தியா இணைய வேண்டும் எனக்கூறினார்

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...