பெரிய அளவில் தெற்கு ஆசிய கூட்டமைப்பு; இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் திட்டம்

சார்க் கூட்டமைப்பில் இந்தியாவால் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான், பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, ஈரானை சேர்த்து, மிகப்பெரிய தெற்காசிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

யூரி தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை புறக்கணிக்க போவதாக இந்தியா அறிவித்தது. இந்தியாவிற்கு ஆதரவாக, வங்கதேசம், பூடான், ஆப்கன் நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன. இதனையடுத்து மாநாடு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சார்க் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவிற்கு போட்டியாக தெற்காசிய அளவில், சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை இணைத்து பெரிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் அமெரிக்கா வந்த பாகிஸ்தான் குழுவினர் கூறுகையில், மிகப்பெரிய தெற்காசிய அமைப்பு உருவாகி வருகிறது. இந்த அமைப்பில் சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய அண்டை நாடுகள் இருக்கும். சீனா - பாகிஸ்தான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு திட்டம், தெற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவை இணைக்கும். சீனாவுக்கு மட்டுமல்லாமல், மத்திய ஆசிய நாடுகளுக்கும் குவாடர் துறைமுகம் எளிதாக அணுகுவதாக இருக்கும். இந்த அமைப்பில் இந்தியா இணைய வேண்டும் எனக்கூறினார்

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...