இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத், ஆயுத பூஜை தினத்தன்று இரு துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுக்கு பூஜை செய்து, அந்தப் புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பதிவேற்றினார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், காவல் துறை ஆணையர் அமல்ராஜ் இதுகுறித்து கூறுகையில், அர்ஜுன்சம்பத் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள அந்த துப்பாக்கி அவருடையது தானா? அப்படி அவருடையதென்றால் அதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தினோம். அர்ஜுன் சம்பத் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக ஆயுதப்படை காவலர் ஒருவர் அவரது வீட்டின் அருகே காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். ஆயுத பூஜை தினத்தன்று அந்த போலீஸ்காரரின் துப்பாகியை வாங்கித்தான் அர்ஜுன்சம்பத் பூஜை செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பாக வைக்க வேண்டிய துப்பாக்கியை, அடுத்தவரிடம் கொடுத்த அந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல் துறை ஆணையர் அமல்ராஜ் இதுகுறித்து கூறுகையில், அர்ஜுன்சம்பத் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள அந்த துப்பாக்கி அவருடையது தானா? அப்படி அவருடையதென்றால் அதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தினோம். அர்ஜுன் சம்பத் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக ஆயுதப்படை காவலர் ஒருவர் அவரது வீட்டின் அருகே காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். ஆயுத பூஜை தினத்தன்று அந்த போலீஸ்காரரின் துப்பாகியை வாங்கித்தான் அர்ஜுன்சம்பத் பூஜை செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பாக வைக்க வேண்டிய துப்பாக்கியை, அடுத்தவரிடம் கொடுத்த அந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.