அர்ஜுன் சம்பத் பூஜை செய்த துப்பாக்கி யாருடையது தெரியுமா ?

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத், ஆயுத பூஜை தினத்தன்று இரு துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுக்கு பூஜை செய்து, அந்தப் புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பதிவேற்றினார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் உள்ளனர். 

இந்நிலையில், காவல் துறை ஆணையர் அமல்ராஜ் இதுகுறித்து கூறுகையில், அர்ஜுன்சம்பத் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள அந்த துப்பாக்கி அவருடையது தானா? அப்படி அவருடையதென்றால் அதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தினோம். அர்ஜுன் சம்பத்  வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக ஆயுதப்படை காவலர் ஒருவர் அவரது வீட்டின் அருகே காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். ஆயுத பூஜை தினத்தன்று அந்த போலீஸ்காரரின் துப்பாகியை வாங்கித்தான் அர்ஜுன்சம்பத் பூஜை செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பாக வைக்க வேண்டிய துப்பாக்கியை, அடுத்தவரிடம் கொடுத்த அந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...