தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும், தொடர்ந்து அலுவலக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டி கோவையில் 1000க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் காவடி மற்றும் பால் குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் மருதமலை சாலையில் அமைந்துள்ள கருப்பராயன் கோவிலில் தொடங்கி மருதமலை கோவில் வரை நடைபெற்றது.

இதில், கோவை மாவட்ட அதிமுக தலைவர் மற்றும் மாநகராட்சி மேயர் ராஜ்குமார், துணை மேயர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.





அவரது உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும், தொடர்ந்து அலுவலக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டி கோவையில் 1000க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் காவடி மற்றும் பால் குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் மருதமலை சாலையில் அமைந்துள்ள கருப்பராயன் கோவிலில் தொடங்கி மருதமலை கோவில் வரை நடைபெற்றது.

இதில், கோவை மாவட்ட அதிமுக தலைவர் மற்றும் மாநகராட்சி மேயர் ராஜ்குமார், துணை மேயர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.




