துப்பாக்கி வைத்து ஆயுதபூஜை அர்ஜூன் சம்பத் மீது வழக்கு

துப்பாக்கி, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து ஆயுத பூஜை கொண்டாடியாதை முகநூலில் பதிவு செய்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உக்கடத்தில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கி ,கத்தி, அரிவாள்போன்ற ஆயுதங்கள் வைத்துகடந்த பத்தாம் தேதி ஆயுத பூஜைகொண்டாடினார். இதனை முகநூலிலும்வெளியிட்டார். சட்ட விரோதமாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்தது குறித்து சென்னை, கோவை போன்ற இடங்களில்பல்வேறு அமைப்பினர் காவல்துறையினரிடம்புகார் அளித்தனர்.

இது குறித்த விசாரணை மேற்கொண்ட கோவை சைபர் காவல்துறையினர் விசாரணையில் இத்தகவல் உறுதிப்படுத்திய சைபர் க்ரைம் காவல் உதவி ஆய்வாளர் அனுபல்லவியின் புகாரின் பேரில், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து மத உணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டது 153 பிரிவின் கீழும், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்து மிரட்டுதல் 25(1)ஏ ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...