பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது


சென்னை: பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி பைக்குகள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், அண்ணா சாலை போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

நேற்று முன்தினம் இரவு ஸ்பென்சர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு பைக்கில் வந்த 3 பேரை மடக்கி, பைக் ஆவணங்களை கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (20), கவுதம் (19) மற்றும் குமார் (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றும், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் எனவும் தெரிந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போது அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தப்படும் பைக்குகளை திருடியது தெரியவந்தது.  அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...