விருதுநகர்: விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி, இ.குமாரலிங்கபுரத்தில் சிவகாசி அனுப்பங்குளத்தைச் சேர்ந்த ராஜசேகர் (51) பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். சென்னை உரிமம் பெற்றுள்ள இந்த பட்டாசு ஆலையில் 12 அறைகள் உள்ளன. நேற்று மாலை இ.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (60) இங்குள்ள ஒரு அறையில், வேறுபட்ட மருந்துகளை பட்டாசுகளுக்காக கலந்து கொண்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட உராய்வில் திடீரென மருந்துக்கலவை வெடித்துச் சிதறியது. இதில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த கட்டிடமும் தரைமட்டமானது.
அப்போது ஏற்பட்ட உராய்வில் திடீரென மருந்துக்கலவை வெடித்துச் சிதறியது. இதில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த கட்டிடமும் தரைமட்டமானது.