கேரள மாநிலம் கண்ணூரில் பஜக பிரமுகர் ரமித் நேற்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது கொலையை கண்டித்து இன்று பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை உக்கடத்தில் இருந்து கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையான வாளையாறு சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது, மேலும் கேரளாவிற்கு செல்லும் லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளதால் முட்டை, காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பயணிகள் கூறுகையில் கேரளாவில் அடிக்கடி திடீர் வேலை நிறுத்தம் ஏற்படுவதால் அங்கு செல்லக்கூடிய வியாபாரிகள் பயணிகள் பாதிப்பு அடைவதாக தெரிவித்தனர்.பேருந்துகள் இயக்கப்படாத்தால் கேரளா செல்லும் பயணிகல் ரயில்கள் மூலம் சென்றனர்.
இது குறித்து பயணிகள் கூறுகையில் கேரளாவில் அடிக்கடி திடீர் வேலை நிறுத்தம் ஏற்படுவதால் அங்கு செல்லக்கூடிய வியாபாரிகள் பயணிகள் பாதிப்பு அடைவதாக தெரிவித்தனர்.பேருந்துகள் இயக்கப்படாத்தால் கேரளா செல்லும் பயணிகல் ரயில்கள் மூலம் சென்றனர்.