கோவை உக்கடம் புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான கொரியர் நிறுவனம் உள்ளது. இந்த கொரியர் நிறுவனம் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் கொரியர் சர்வீஸ் செய்து வருகின்றது. இந்நிறுவனத்தில் இரண்டு ஊழியர்கள் இரவு நேரத்தில் பணியாற்றி இருந்தனர், அப்போது ஒரு ஊழியர் வெளியே சென்றதாக கூறப்படுகின்றது. அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த கொரியர் ஊழியரை பிடித்து தாக்கி கட்டிவைத்து, அங்கு உள்ள கல்லா பெட்டியில் இருந்து ரூ.9.50லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து, அந்நிறுவளத்தின் மேலாளர் பாலாஜி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த ஊழியர் கொடுத்த தகவலின் பேரில் புலியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை துணை ஆணையாளர் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், கொரியர் நிறுவனத்தில் இருந்த சிசிடிவி காமெராவின் பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கொரியர் நிறுவனத்தில் ஊழியரை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து, அந்நிறுவளத்தின் மேலாளர் பாலாஜி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த ஊழியர் கொடுத்த தகவலின் பேரில் புலியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை துணை ஆணையாளர் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், கொரியர் நிறுவனத்தில் இருந்த சிசிடிவி காமெராவின் பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கொரியர் நிறுவனத்தில் ஊழியரை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
