துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மியான்மரில் மோதல்; 12 பேர் சாவு

மியான்மரில் ராக்கைன் மாகாணத்தில் துப்பாக்கி ஏந்திய கலகக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள பியாங்பிட் என்ற இடத்தில் பாதுகாப்பு படை வீரர்களும், துப்பாக்கிகளையும், வாள்களையும் ஏந்தி வந்த கலகக்காரர்களும் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர், கலகக்காரர் ஒருவர் என 5 பேர் பலியாகினர்.

இதற்கிடையே டாங் பாயிங் நயார் என்ற இடத்திலும், கலகக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 7 பேர் உயிரிழந்தனர். இறந்து போனவர்களின் உடல்கள் அருகே வாள்களும், தடிகளும் கிடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த மோதல்களை தொடர்ந்து அந்தப்பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...