குஜராத்தில் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் இருவர் கைது : ராணுவ நடவடிக்கைகளை நோட்டமிட்டதாக விசாரணயில் தகவல்

காவ்தா: பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ உளவாளிகள் 2 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்ச் மாவட்டத்தில் உள்ள காவ்தா நகரில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது முகமது அலானா மற்றும் சஃபூர் சுமாரா ஆகிய இரண்டு பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பாகி்ஸ்தான் நாட்டின் சிம் கார்டுடன் கூடிய செல்போன்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை அவர்கள் கண்காணித்து வந்தது தெரிய வந்துள்ளது.

ராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து பாகிஸ்தானில் உள்ள தமது ஆதரவாளர்களுக்கு தெரிவித்ததாக அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்கான முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பயங்கரவாதிகள், அதற்காக சுமார் 250 பேரை ஊடுருவவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், I.S.I உளவாளிகள் இரண்டு பேர் குஜராத்தில் பிடிப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...