இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்

அருந்ததியினருக்காக வழங்கப்பட வேண்டிய இலவச வீட்டு மனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் 60,000க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடில்லாத ஏழை அருந்ததிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை வேறு சிலருக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

எனவே, விவசாய மற்றும் வீடு கட்டுவதற்கு தேவையான நிலத்தை வழங்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் வெண்மணி கூறியதாவது: நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் 1000 ஏக்கர் நிலத்தை தொண்டாமுத்தூர் பகுதியில் அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது. அதில், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் அருந்ததியர் மக்களுக்கு பட்டா பிரித்து கொடுக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குமேலும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தவறினால் மேற்குறிப்பிட்ட இடத்தை கையகப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...