நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அடுத்த கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (38). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் கோத்தகிரிக்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மான் சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரன் வாகனத்தை நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்ட கோத்தகிரி காவல்துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழனன்று (இன்று) பாஸ்கரன் உயிரிழந்தார்.
இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்ட கோத்தகிரி காவல்துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழனன்று (இன்று) பாஸ்கரன் உயிரிழந்தார்.