கோவை, தாமஸ் வீதியைச் சேர்ந்தவர் முருகன் (40). இவர் அதே பகுதியில் தங்கப்பட்டறை வைத்து நிர்வகித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தங்க நகை செய்யும் ஒப்பந்தம் ஒன்று வந்துள்ளது. இதற்காக, தனது பட்டறையில் பணிபுரியும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புற்றுமல் என்பவரிடம் 2 கிலோ 250 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கொடுத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 65 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், புற்றுமல் தங்க நகைகளுடன் திடீரென மாயமானதால், அதிர்ச்சியடைந்த முருகன் இதுகுறித்து வெரைட்டிஹால் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் மாயமான வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், புற்றுமல் தங்க நகைகளுடன் திடீரென மாயமானதால், அதிர்ச்சியடைந்த முருகன் இதுகுறித்து வெரைட்டிஹால் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் மாயமான வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.