11 மாதமே ஆன ஜெகதீஷ் என்ற ஆண் குழந்தைக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் இருந்ததோடு, போதுமான வளர்ச்சியும் இல்லை என்று கடந்த வாரம் கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர்கள் அனுமதித்தனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தையின் தாய் தமிழ்செல்வி 11வயதாக இருந்தபோது 2001-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருதய கோளாறுக்காக கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு இருதயச்சுவர்களுக்கு இடையே உள்ள குறைபாட்டை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதை மனதில் கொண்ட இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலசுந்தரம், குழந்தைக்கும் அந்த பாதிப்பு இருக்கலாம் என சந்தேகமடைந்தார்.
பின்னர், குழந்தையை பரிசோதனை செய்தபோது (2.2செ.மீ-1.5 செ.மீ) அளவில், இரு தமனிகளுக்கும் இடையே உள்ள சுவற்றில் பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தார். இது வேறு எந்த இருதய நோயுடனும் தொடர்புடையதாக இல்லை. எனவே, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலசுந்தரம், குழந்தைக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அறுவை சிகிச்சைக்குப்பின் குழந்தை, பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த அறுவை சிகிச்சையில் குழந்தையின் தாய்க்கு சிறுவயதில் இருதய அறுவை சிகிச்சையை செய்ததும் டாக்டர் பாலசுந்தரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறுவை சிகிச்சையில் குழந்தையின் தாய், ஆரோக்கியமாக வளர்ந்து, திருமணமாகி, தாம்பத்யத்திலும் எவ்வித சிக்கலும் இல்லாமல், ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார். எனவே இத்தகைய இருதய நோய் பற்றி உற்றார் உறவினர்களும், பெற்றோர்களும் நண்பர்களும் யாரும் கவலை கொள்ள தேவையில்லை. சரியான நேரத்தில், சரியான மருத்துவமனைக்கு சென்று, சரியான மருத்துவம் பெற்றால், விரைவில் குணமடைய முடியும். இதுபோன்ற இருதய கோளாறுகளை எளிதாக கண்டுபிடித்து, துல்லியமாக அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த முடியும்.
பின்னர், குழந்தையை பரிசோதனை செய்தபோது (2.2செ.மீ-1.5 செ.மீ) அளவில், இரு தமனிகளுக்கும் இடையே உள்ள சுவற்றில் பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தார். இது வேறு எந்த இருதய நோயுடனும் தொடர்புடையதாக இல்லை. எனவே, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலசுந்தரம், குழந்தைக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அறுவை சிகிச்சைக்குப்பின் குழந்தை, பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த அறுவை சிகிச்சையில் குழந்தையின் தாய்க்கு சிறுவயதில் இருதய அறுவை சிகிச்சையை செய்ததும் டாக்டர் பாலசுந்தரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறுவை சிகிச்சையில் குழந்தையின் தாய், ஆரோக்கியமாக வளர்ந்து, திருமணமாகி, தாம்பத்யத்திலும் எவ்வித சிக்கலும் இல்லாமல், ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார். எனவே இத்தகைய இருதய நோய் பற்றி உற்றார் உறவினர்களும், பெற்றோர்களும் நண்பர்களும் யாரும் கவலை கொள்ள தேவையில்லை. சரியான நேரத்தில், சரியான மருத்துவமனைக்கு சென்று, சரியான மருத்துவம் பெற்றால், விரைவில் குணமடைய முடியும். இதுபோன்ற இருதய கோளாறுகளை எளிதாக கண்டுபிடித்து, துல்லியமாக அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த முடியும்.