உலகில் மிக நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ்!

பாங்காக்: உலகில் மிக நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர் என்னும் பெருமை பெற்ற தாய்லாந்து மன்னன் பூமிபால் அதுல்யதேஜ் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவசிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 88.

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும் நிர்வாகத்தின் தலைவராக மன்னரே இருந்து வருகிறார். இங்கு 1946ம் ஆண்டு ஜூன் 9ல் ஆட்சி பொறுப்பேற்ற பூமிபால் மன்னர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராக பதவி வகித்தவர்.

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் பிறந்த இவர்,பல நலத்திட்டங்களை நிறைவேற்றியதால் அவர் மீது தாய்லாந்து மக்கள் மிகுந்த அன்பு கொண்டு இருந்தனர். அவரது ஆட்சிக் காலத்தில் தாய்லாந்து பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்தது. இந்நிலையில், சிறுநீரக கோளாறு மற்றும் இதய பாதிப்பு காரணமாக, பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர்.

தாய்லாந்து மக்கள் நேற்று முதலே பூமிபால் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு ஒன்று திரண்டு மன்னர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர். பெண்கள் பிங்க் நிற ஆடை அணிந்து வந்து அவர் புகைப்படத்தை ஏந்தி பிரார்த்தனை செய்தனர். மன்னரின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டதும் அவர்கள் கதறி அழுதனர். மன்னரின் இறப்புச் செய்தி தாய்லாந்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2008ல் மன்னரின் சகோதரி மரணமடைந்த போது அரசு 100 நாட்களை துக்க நாட்களாக அறிவித்தது. ஆனால் அவருக்கான இறுதிச்சடங்குகள் 10 மாதங்களுக்கு பிறகுதான் நடந்தது. இந்நிலையில் மன்னரின் இறப்பை அடுத்து தாய்லாந்தில் அடுத்த சில மாதம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே தாய்லாந்தின் புதிய மன்னராக மகா வஜ்ஜிரலாங்கோன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...