தமிழக நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமனம்: மத்திய அரசு முடிவு?

டெல்லி: தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமிக்கக் கூடும் என உள்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. தமிழக ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இதையடுத்து வித்யாசாகர் ராவ், செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநராக பதிவியேற்றுக்கொண்டார்.

இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் உடல்நலம் தேறி வந்தாலும், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வர் அல்லது இடைக்கால முதல்வரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து முதல்வர் வகித்துவந்த இலாக்காக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார். அமைச்சரவை கூட்டங்களுக்கும் அவரே தலைமை வகிப்பார் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரைவில் நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமிக்கக் கூடும் எனவும், அவர் தற்போது வகித்து வரும் மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்புக்கு கர்நாடகா மாநில மூத்த பாஜக தலைவர் டி.ஹெச். சங்கரமூர்த்தி நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...