மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,237 கனஅடியில் இருந்து 4,253 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 67.38 அடியாகவும், நீர் இருப்பு 30.49 டிஎம்சியாகவும் உள்ளது.அணையில் இருந்து சாகுபடிக்கு நீர் திறப்பு 18,000 கனஅடியாக உள்ளது.
கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகரில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு கடந்த 20-ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி வரை மேலும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
நீர்வரத்தைவிட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகரில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு கடந்த 20-ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி வரை மேலும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
நீர்வரத்தைவிட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.