தஞ்சை: காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண தம்மால் இயன்றதை செய்வேன் என்று தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் உறுதி அளித்துள்ளார். மும்பையிலுள்ள மத்திய அரசின் கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு, தமிழ் பேரரசர் ராஜேந்திர சோழனின் உருவப்படத்தை அர்பணித்ததற்காக, தஞ்சையில் தமிழக ஆளுநர் பொறுப்பு வித்யாசாகர் ராவுக்கு சென்னை தமிழ்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாட்டில் காவேரி டெல்டா விவசாயிகளின் பிரச்சனை குறித்து தாம் நன்கு அறிவேன். காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் சார்பில் 30 நிமிடம் உரை நிகழ்த்தப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
விழாவில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, தமிழ் பல்கலைகழ துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாட்டில் காவேரி டெல்டா விவசாயிகளின் பிரச்சனை குறித்து தாம் நன்கு அறிவேன். காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் சார்பில் 30 நிமிடம் உரை நிகழ்த்தப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
விழாவில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, தமிழ் பல்கலைகழ துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.