ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 85-ஆவது பிறந்த நாளையொட்டி, இராமேஸ்வரத்தில் உள்ள அவரது சமாதி வளாகத்தில் ரூ.15 கோடியில் மணி மண்டபம் கட்டுவதற்கான பணிகள் சனிக்கிழமை நாளை தொடங்க உள்ளது.
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் சமாதி வளாகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு கண்காட்சி, அறிவுசார் மையம், நினைவு மண்டபம் ஆகியவற்றை அமைக்க இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக கடந்த ஜூலை 27-ஆம் தேதி நடைபெற்ற முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் திட்டப்பணிகள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதையடுத்து அப்துல்கலாமின் 85-ஆவது பிறந்த நாளையொட்டி, முதல்கட்டமாக 27 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்பில் ரூ.15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணி சனிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கப்படவுள்ளது.
இதையொட்டி, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டடப் பிரிவு பொறியாளர் சீனிவாசலு தலைமையில் சமாதி வளாகப் பகுதியில் ஆய்வு நடைபெற்றது. மணிமண்டபம் கட்டப்படும் பகுதியில் வரைபடத்தின்படி அளவீடு செய்து குறியீடு கம்பிகள் ஊன்றும் பணிகளில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திட்டப்பணி ஒப்பந்தகாரர் ஜெகநாதன் தெரிவித்ததாவது:
அப்துல் கலாம் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கப்படவுள்ளன. இந்தப் பணிகளை 2017-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று புதிய மணி மண்டபத்தை திறந்து, அதில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இரண்டாம் கட்டப்பணியாக ரூ. 35 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் மற்றும் கண்காட்சி மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என அவர் தெரிவித்தார்.
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் சமாதி வளாகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு கண்காட்சி, அறிவுசார் மையம், நினைவு மண்டபம் ஆகியவற்றை அமைக்க இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக கடந்த ஜூலை 27-ஆம் தேதி நடைபெற்ற முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் திட்டப்பணிகள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதையடுத்து அப்துல்கலாமின் 85-ஆவது பிறந்த நாளையொட்டி, முதல்கட்டமாக 27 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்பில் ரூ.15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணி சனிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கப்படவுள்ளது.
இதையொட்டி, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டடப் பிரிவு பொறியாளர் சீனிவாசலு தலைமையில் சமாதி வளாகப் பகுதியில் ஆய்வு நடைபெற்றது. மணிமண்டபம் கட்டப்படும் பகுதியில் வரைபடத்தின்படி அளவீடு செய்து குறியீடு கம்பிகள் ஊன்றும் பணிகளில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திட்டப்பணி ஒப்பந்தகாரர் ஜெகநாதன் தெரிவித்ததாவது:
அப்துல் கலாம் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கப்படவுள்ளன. இந்தப் பணிகளை 2017-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று புதிய மணி மண்டபத்தை திறந்து, அதில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இரண்டாம் கட்டப்பணியாக ரூ. 35 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் மற்றும் கண்காட்சி மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என அவர் தெரிவித்தார்.