கோவை மாவட்டம், போத்தனூரை அடுத்த அண்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் முகிலேஷ் (17) செங்கோட்டையில் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாக கடுமையான தலைவலி இருந்துவந்ததாகவும், இதனால், படிப்பில் முழுக் கவணம் செலுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தொடர்ந்து தலைவலி இருந்துவந்ததன் காரணமாக மனவேதனையில் காணப்பட்ட முகிலேஷ் வியாழக்கிழமை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போத்துனூர் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தொடர்ந்து தலைவலி இருந்துவந்ததன் காரணமாக மனவேதனையில் காணப்பட்ட முகிலேஷ் வியாழக்கிழமை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போத்துனூர் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.