நாளை துவங்குகிறது பிரிக்ஸ் மாநாடு: பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம்

பனாஜி: பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு கோவாவில் நாளை துவங்க உள்ள நிலையில், பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்ரிக்கா, இந்தியா ஆகிய உறுப்பு நாடுகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு, நாளையும் நாளை மறுநாளும் கோவாவில் நடைபெற உள்ளது.  இதில் 4 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். உரி தாக்குதலை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இதனை தொடர்ந்து வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறகணித்ததால் மாநாடு தள்ளிவைக்கப்பட்டது.

சர்வதேச நாடுகளின் மத்தியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நடவடிக்கையின் ஒருகட்டத்தை இந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் மூலம் இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பாரக்கப்படுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட உள்ளது. மேலும் கூடங்குளம் 3 மற்றம் 4-வது அணுஉலை திட்டமும் துவங்கப்பட உள்ளது.

மேலும் இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இதை தவிர சீனா உள்ளிட்ட நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்தவும் இந்த மாநாட்டை இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன,

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...