பதர்வா: ஜம்மு காஷ்மீரின் மலை மாவட்டமான தோடாவில் நேற்று காலை மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா நகரில் நேற்று காலை 10.28 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பதர்வாவில் இருந்து 7 கி.மீ தென்கிழக்கு பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நொடிகள் நீடித்த இந்த நிலஅதிர்வால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இதனால் வீட்டை விட்டு வெளியேறி அவர்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 புள்ளிகளாக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இந்த நில நடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.
இதனால் வீட்டை விட்டு வெளியேறி அவர்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 புள்ளிகளாக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இந்த நில நடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.